ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மாபெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 288 அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பாஹா நாகா பஜார் ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் மூடி சீல் வைத்திருப்பதால் அங்கு ரயில்கள் நிற்காமல் செல்கின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலாசோரில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 288 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதோடு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த விபத்தின் எதிரொலியாக தென்கிழக்கு பகுதியில் இயங்கி வரும் 24 அதிவிரைவு ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் இருக்கின்ற ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறி இருக்கிறது. ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ஒட்டுமொத்த இன்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது.