நவீன பணியிடம் என்பது வெறும் பணிகளை முடிப்பதற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் மட்டும் இடமாக இல்லை. பலருக்கு, இது உணர்ச்சிப் பிணைப்புகள் உருவாகி உறவுகள் தொடங்கும் இடமாக மாறிவிட்டது. நீண்ட நேரம் ஒன்றாகச் செலவிடுவது பெரும்பாலும் சக ஊழியர்களிடையே பரிச்சயம், ஆறுதல் மற்றும் ஈர்ப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டதாகவோ அல்லது தொழில்முறையற்றதாகவோ கருதப்பட்ட அலுவலக காதல்கள் இப்போது எப்போதையும் விட அதிகமாகிவிட்டன. குறிப்பாக இந்தியாவில்தான் அலுவலக காதல்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆஷ்லே மெடிக்கல் நடத்திய புதிய சர்வதேச கணக்கெடுப்பில், பணியிட உறவுகளில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வு, இந்தியர்கள் சக ஊழியர்களுடன் காதல் உறவுகளில் அதிகளவில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. இதில் மெக்சிகோ முதலிடம் பிடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா. இதில் 13,581 வயது வந்த நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய அலுவலக சூழல்களில் பணியிட எல்லைகள், நடத்தைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் பணியிட காதல் என்பது சகஜமாகவே இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. 10ல் நான்கு இந்தியர்கள் பணியிடத்தில் டேட்டிங் செய்திருக்கலாம் அல்லது செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக உலகில் இளைய தலைமுறையினர் பணியிட உறவு குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-24 வயதுடையோரில் 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் கேரியரை பாதிக்கக்கூடும் எனக் கருதுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் அலுவலக காதல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், பெண்களில் இது 36 சதவீதமாக இருந்தால், 51 சதவீதம் என்றும் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
ஆய்வின் மிகவும் ஆச்சரியமான நுண்ணறிவுகளில் ஒன்று, பெண்கள் பணியிட உறவுகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதுதான். கிட்டத்தட்ட 29 சதவீத பெண்கள் தங்கள் தொழில்முறை வளர்ச்சி குறித்த கவலைகள் காரணமாக அலுவலக காதல்களைத் தவிர்ப்பதாகக் கூறினர். ஆண்களில், இந்த கவலையை 27 சதவீதம் பேர் வெளிப்படுத்தினர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடைய இளம் ஊழியர்கள், அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்று அஞ்சி மிகவும் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் அதிகமாக உள்ளதா? அலுவலக காதல்களின் அதிக விகிதம், இந்தியாவில் உறவுகள் குறித்த அணுகுமுறைகளில் பரந்த மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது. திறந்த திருமணங்கள் மற்றும் நெகிழ்வான உறவு கட்டமைப்புகள் போன்ற புதிய யுக கருத்துக்கள் பிரபலமடைந்து வருகின்றன.
திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் செயலியான க்ளீடன் நடத்திய ஆய்வில், 35 சதவீத இந்தியர்கள் தற்போது திறந்த உறவுகளில் இருப்பதாகவும், மேலும் 41 சதவீதம் பேர் தங்கள் துணைவர் ஒப்புக்கொண்டால் ஒன்றைப் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளனர். சுவாரஸ்யமாக, இந்தப் போக்கு பெரிய பெருநகரங்களுக்கு மட்டுமல்ல; சிறிய நகரங்களிலும் இதுபோன்ற விருப்பத்தேர்வுகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, காஞ்சிபுரம் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் அதிக ஆர்வத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



