“ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் – கெனிஷாவின் திருமண புகைப்படம்..?

Ravi Mohan 2025

ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் ரவி மோகன். இவர் தந்தை மோகன் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல அவதாரம் எடுத்தவர். மேலும், ரவி மோகனின் அண்ணனும் ரவி மோகனை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால், சமீப காலமாக ரவி மோகனுக்கு படங்கள் எதுவும் செட் ஆகவில்லை. அதே நேரத்தில், அவரின் குடும்பப் பிரச்சனையும் வெடித்தது.


ரவி மோகன் ஆர்த்தியை திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் தான், தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அதிரடியாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்த நிலையில், இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். கடந்த வாரத்தில் இருவரும் வைத்த குற்றச்சாட்டு அறிக்கைகளை நீக்க வேண்டும் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இவர்களின் விவகாரத்து தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரவி மோகனும் பிரபல பாடகியுமான கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேசின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டனர். இது அப்போது பேசுபொருளாக மாறியது. மேலும், ஆர்த்தி – ரவி மோகன் பிரிவுக்கு கெனிஷா தான் காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கெனிஷா உடன் ரவி மோகன் வெளியிட்ட புகைப்படம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், அங்கு வந்த பக்தர்கள் இவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், ரவியும், கெனிஷாவும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், இருவரும் திருமணமே செய்து கொண்டார்களா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More : “எங்களை ஏமாத்திட்டாங்க”..!! “தயவு செஞ்சு ஆக்‌ஷன் எடுங்க”..!! கண்ணீர்விட்டு கதறும் தனுஷ் பட நடிகை..!! என்ன ஆச்சு..?

CHELLA

Next Post

ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.21 கோடியாக உயர்ந்த விராட் கோலியின் IPL சம்பளம்..!! 18 வருடத்தில் மட்டும் இத்தனை கோடியா..?

Thu Jun 5 , 2025
18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்சிபி மற்றும் விராட்டின் கோப்பையை வெல்லும் கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்தக் கனவை நனவாக்க 18 ஆண்டுகள் ஆனது. போட்டியின் கடைசி சில ஓவர்களில், ஆர்சிபி வெற்றியின் விளிம்பில் இருந்தபோது, ​​கோலியின் ஈரமான கண்கள், கடந்த 18 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான ரசிகர்களும் விராட்டும் காத்திருந்த கனவை வெளிப்படுத்தின. ஆர்சிபியிடமிருந்து விராட் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..? பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்குப் […]
virat ipl

You May Like