தீபாவளிக்கு எண்ணெய் குளியல்..!! எவ்வளவு அவசியம் தெரியுமா..? கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Oil Bath 2025

நம் பாரம்பரியத்தில் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் கடைபிடிக்கப்பட்டு வந்த எண்ணெய் குளியல் என்னும் ஆரோக்கியப் பழக்கம் இன்று வழக்கொழிந்துவிட்டது. தற்போது அழகு நிலையங்களில் ‘ஹாட் ஆயில் மசாஜ்’ என்ற பெயரில் இது நவீன வடிவம் எடுத்து அதிக செலவில் கிடைக்கிறது.


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், உடல் வெப்பத்தைத் தணித்து சமநிலைப்படுத்த இந்த எண்ணெய் குளியல் அவசியமாகிறது. குறிப்பாக, தீபாவளி நாளில் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள், நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கருதப்படுவதால், எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும் வழக்கம் “கங்கா ஸ்நானம்” என்று அழைக்கப்பட்டு, வாழ்வின் அனைத்து நலன்களையும் அருளும் ஒரு சடங்காகப் பார்க்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, வயது வித்தியாசமின்றி அனைவரும் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களையும் சமன் செய்கிறது. மேலும், நிண நீரோட்டத்தைச் சீராக்குவதன் மூலம் உடலில் சேரும் கழிவுகள் வெளியேற உதவுகிறது.

எண்ணெய் மசாஜ் செய்யும் போது வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மகிழ்ச்சியை அளிக்கும் ஹார்மோன்களும் தூண்டப்படுகின்றன. தலை முதல் கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து, முகம், கண்கள், மூக்கு, அக்குள் போன்ற முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்தி, சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்த பின் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சிறந்தது. சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஊற வைக்க வேண்டியதில்லை. மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்குப் பிறகு 3 மணி நேரத்திற்குள் குளிப்பது உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.

எண்ணெய் குளியல் செய்த நாளில் சில கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பது அவசியம். உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் இந்த நாளில் குளிர்ந்த உணவுகளையும், பகல் தூக்கத்தையும் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக, அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது அசைவம் செரிமானத்தைத் தாமதப்படுத்தி உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், மனம் மற்றும் உடல் அழுத்தத்தைக் குறைத்து, சரும அமைப்பை மேம்படுத்தி பளபளப்பாக வைத்திருக்க எண்ணெய் குளியல் உதவுகிறது. இது முடி வளர்ச்சி, கண் பார்வை கூர்மை, நரம்பு ஆரோக்கியம் மற்றும் நல்ல உறக்கம் ஆகியவற்றை அளிக்கிறது. ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை முறையாகவும் விளங்குகிறது.

Read More : “டிஜிட்டல் இந்தியா” தோல்வி..!! 20 ரூபா சமோசாவுக்கு ரூ.2,000 போச்சு..!! ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!! அதிர்ச்சி வீடியோ..!!

CHELLA

Next Post

பிணவறையில் தரையில் கிடந்த இளம்பெண் சடலம்..!! சிசிடிவி காட்சியை பார்த்து ஆடிப்போன மருத்துவர்கள்..!! திகிலூட்டும் சம்பவம்..!!

Sun Oct 19 , 2025
மத்தியப் பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் அரங்கேறிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், சடலம் தரையில் […]
death

You May Like