மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறும் வகையில். மோடி தலைமையிலான அரசு 2024 ஆம் ஆண்டுக்கு முன் இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்தத் துறையில் செயல்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.


 எனினும், அமைச்சகத்திடம் இருந்து இதுவரை உறுதியான பதில் எதுவும் வரவில்லை. அதே நேரத்தில், கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக வந்த செய்திகளை இணை அமைச்சர் பகவத் கரத் மறுத்திருந்தார்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து மத்திய அரசு இன்னும் உறுதியான பதில் எதையும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் அனுகூலத்துக்கு பயன்படுத்தி வருவதால், இது குறித்து உறுதியான அறிவிப்பு விரைவில் வரக்கூடும். டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க மத்திய அரசு பரிசீலிக்கக் காரணம் இதுதான்.

‘பழைய ஓய்வூதியப் பிரச்சினை மிகப் பெரியது. இது குறித்து சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. அமைச்சகத்தின் பதிலுக்கு பிறகே இது குறித்து முடிவு எடுக்க முடியும்.’ என்று ஜிதேந்திர சிங் கூறினார்.  

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், மத்திய அரசு, இந்த வழக்கை சட்ட அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது. நிதிச் சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையானது, ஜனவரி 01, 2004 அன்று அல்லது அதற்கு முன் யாருடைய ஆட்சேர்ப்புக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதோ, அந்த ஊழியர்களை பென்ஷன் அல்லாதோர் வரம்பிலிருந்து விலக்குவது குறித்து சரியான முடிவை எடுக்கலாம். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரக்கூடும். பிரச்சினை தீர்க்கப்பட்டால், ஓய்வூதியம் பெறுவோர் பெரிய பலனைப் பெறக்கூடும். 

Next Post

புதிய வசதி :கிரெடிட் ஸ்கோர் வாட்ஸ் ஆப்பில் பார்க்கலாம்…

Sat Nov 12 , 2022
புதியதாக கடன் வழங்கும் நிறுவனங்களிலும் வங்கிகளிலும் தனி நபருக்கு கடன் வழங்க தேவையான கிரெடிட் ஸ்கோர் பற்றிய விவரங்களை இனி வாட்ஸ் ஆப்பில் பெற முடியும். கடன் வழங்கும் நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் தனி நபர் கடன் வழங்க கேட்கப்படும் மிக முக்கியமானது கிரெடிட் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண்களை கொண்டுள்ளது. இந்த கிரெடி ஸ்கோர் பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை […]
Whatsapp Feature

You May Like