மீண்டும் தமிழகத்தை விரட்டும் மழை!! உருவாகின்றது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

தென்கிழக்கு வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதிமுதல்மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மேற்கில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மித கனமழை பெய்யும் என தெரிவிகக்ப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Post

நியூசிலாந்து-இந்தியா இன்றைய ஆட்டம் ரத்து…

Fri Nov 18 , 2022
நியூசிலாந்தில் வெலிங்டன் மைதானத்தில் நடக்கும் போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போடாமலேயே ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல்நாள் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் 12 மணியில் இருந்து மழை விடுமா என காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தொடருக்கான […]
India vs New Zealand 1st T20I LIVE Cricket Score

You May Like