அரசு பணியில் சேர ஓர் ஆண்டு முன் அனுபவம் கட்டாயம்…! சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தகவல்…!

அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓராண்டு பணி அனுபவம் “கட்டாயம்” என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். புதிய விண்ணப்பதாரர்கள் நேரடியாக அரசுப் பணியில் சேர்க்கப்பட மாட்டார்கள். அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன், தனியார் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.


வடக்கு கோவாவில் உள்ள தலீகாவ் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர், எதிர்காலத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாக்கப்படும் என்றார். இத்தகைய நடைமுறையானது திறமையான மனிதவளத்தைப் பெற அரசுக்கு உதவும் என்றார்.

காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் என்று முதல்வர் கூறினார். எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.

Vignesh

Next Post

மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி...! கண்காணித்து வரும் மத்திய அரசு...!

Wed Nov 9 , 2022
மத்திய நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து சட்டப்படி கண்காணித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் கீழ் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் இறுதி இருப்பு, இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 25.6 மில்லியன் டன் ஆக இருந்தது. இது கொவிட் பெருந்தொற்று 2020-21 ஆண்டைத் தவிர […]
long term thermal coal demand in china and other emerging markets

You May Like