பகுதி நேர வேலை வாய்ப்பு என்று கூறி மோசடி….! 10 லட்சத்தை இழந்த வங்கி மேலாளர்…..!

மகாராஷ்டிரா மாநிலம் கொலாபாவில் இருக்கின்ற வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34 வயதான ஒரு நபரிடம் வாட்ஸ் அப் மூலமாக 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.


அப்போது இணையதளம் மூலமாக பகுதி நேர வேலை வாங்கி தருவதாக தெரிவித்து அந்த கும்பல் வங்கி மேலாளர் இடமிருந்து 10 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்கியின் மேலாளர் வீடு சிபிடி பலாப்பூரில் இருக்கின்ற நிலையில், அவரை நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலை என்று தெரிவித்து யூடியூபில் வீடியோக்களை லைக் செய்து அதனை டெலகிராம் வலைதளத்திற்கு அனுப்பினால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.

இரண்டு விளம்பரங்களை லைக் சேரி டெலகிராமில் போஸ்ட் செய்தால் 180 மற்றும் 100 ரூபாய் வழங்கப்படும் என்று அந்த கும்பல் ஆசை வார்த்தை தெரிவித்துள்ளது. இவனை நம்பி அவர் பணத்தை அனுப்பி இருக்கிறார். ஆனால் இந்த முதலீட்டின் மூலமாக அவருக்கு எந்த விதமான லாபமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த மோசடி கும்பலிடம் கேட்டபோது முதலீட்டிற்கான நடைமுறை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் அதை அனுப்பி லாபத்துடன் மொத்த முதலீட்டு பணத்தையும் கொடுத்து விடுகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்து கொண்டார். பின்னர் கொலபாவில் இருக்கின்ற வங்கி கிளையை அணுகி பணத்தை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்குமாறு வங்கி நிர்வாகம் கூறிவிட்டது.

Next Post

பஞ்சாப் லூதியானாவில் திரைப்பட பாணியில் 7 கோடி கொள்ளை….! காவல் துறை அதிரடி நடவடிக்கை…..!

Mon Jun 12 , 2023
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கின்ற சி எம் ஸ் நிறுவனம் வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வாங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் 10 பேர் அடங்கிய குழு இந்த நிறுவனத்திற்கு நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் கட்டி போட்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிறுவனத்திலிருந்து 7 கோடி கொள்ளை அடித்து […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like