கரைந்து போகும் ஓபிஎஸ் அணி..? மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!! எடப்பாடி பழனிசாமி குஷி..!!

Edappadi Palanisamy 2026

விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். ஓ.பி.எஸ்-ன் ‘அதிமுக உரிமை மீட்புக் குழுவின்’ விழுப்புரம் மாவட்டச் செயலாளராகச் செல்வாக்குடன் திகழ்ந்த ஏழுமலையின் இந்தத் திடீர் முடிவு, மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : முடிவுக்கு வரும் இழுபறி..! இத்தனை சீட் தான்..! ஸ்டாலின் கறார்..! இன்று முடிவை அறிவிக்கிறது காங்கிரஸ்..!

CHELLA

Next Post

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி..!! ஒரு கிராமுக்கு இவ்வளவு மட்டும் தான்..!! கடும் கட்டுப்பாடு..!! வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Wed Mar 4 , 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே மக்கள் மத்தியில் அனலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் மீண்டும் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அஸ்திரத்தை கையில் எடுக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக […]
Gold Loan

You May Like