திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது. திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார். ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் அந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த கடையை […]
மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் 32 கோடி மதிப்பில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று ஷாருக்கான் எடுத்துச் சென்ற விலை உயர்ந்த வாட்சுக்கு அபராதம் விதித்தனர். அதே போல 61 கிலோ எடையுள்ள 32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை 7 பயணிகளிடம் பரிமுதல் செய்தனர். […]
பொன்னியின் செல்வன் பாகம் 2-க்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் சில காட்சிகள் படம்பிடிக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்திற்காக ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 10 நாட்கள் வரையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த காட்சிகளை மணிரத்னம் படமாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று […]
கனமழை பெய்து வருவதை ஒட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில் பல்வேறு […]
யூகி திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ப்பமாகிவிட்டேன் என்று தெரிவித்து நடிகை ஆனந்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான நடிகை ஆனந்தி ஆந்திர மாநிலம் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்குப்படத்தின் ’ஈ ராஜுலு’’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தமிழில் 2014ல் வெளியான ’பொறியாளன்’ திரைப்படம்தான் இவருக்கு தமிழ் மொழியில் முதல் படம். தொடர்ந்து ’கயல்’ என்ற திரைப்படத்திலும் நடித்தார். இந்த […]
’’இரவின் நிழல்’’ திரைப்படம் குறித்த சர்ச்சைகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் திரைப்படத்தை பாருங்கள் பின்னர் முடிவை எடுங்கள் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கின்றார். கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் நான் லீனியர் முறையில் படம் ஆக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியான இரவின் நிழல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை […]
பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. போட்டியில் பாகிஸ்தான் படு தோல்வியை சந்தித்த பின்னர் சோயிப் […]
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், ’’ வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறினால் எந்த திசையில் செல்லும், எந்த அளவிற்கு தாக்கம் இருக்கும் போன்றவற்றை தொடர்ந்து கணித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் […]
இங்கிலாந்து அணியின் சாம்கரனுக்கு ஆட்ட நாயகன் விருது தட்டிச்சென்றார். இங்கிலாந்து அணியின் வீரர் சாம்கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம்கரன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுவரை டி.20 12 சுற்று ஆட்டத்தில் சாம்கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்கள் இவ்விருதுக்கு தேர்வு […]
குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி நேற்று வெளியே வந்தார். பின்னர் அவர் காட்பாடியில் பிரம்மபுரத்தில் உள்ள இல்லத்தில் தங்கினார். […]