‘அப்பா, நாங்கள் பிழைக்க மாட்டோம்..’ உத்தரகாஷி வெள்ளத்தில் காணாமல் போன மகன் கடைசியாக பேசியதை நினைவுகூர்ந்த தந்தை..

Uttarkashi 2025 08 709f147416dfa226031e7972b8c9448f

உத்தரகாண்ட் மாநிலம், தாராலியில் கடந்த 5 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உத்தர்காஷி பேரழிவிற்கு உள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், பல வீடுகள், ஹோட்டல்கள் ஆகியவை நீரில் அடித்து செல்லப்பட்டன.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வெள்ளத்தில் காணாமல் போன தங்கள் மகனுடனான கடைசி உரையாடல் குறித்து ஒரு தந்தை உருக்கமாக பேசி உள்ளார்.. நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களான காளி தேவி மற்றும் அவரது கணவர் விஜய் சிங் தம்பதி இந்த பேரழிவில் இருந்து தப்பியது குறித்து நினைவு கூர்ந்துள்ளனர்..


பள்ளத்தாக்கில் சாலை மற்றும் பாலம் கட்டுமானத் திட்டங்களில் பணிபுரியும் நேபாளத்தைச் சேர்ந்த 26 தொழிலாளர்கள் குழுவில் சிங் ஒருவராக இருந்தார். மேக வெடிப்பு காரணமாக பள்ளத்தாக்கில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் தனது மகனை காணவில்லை என்று கூறினார்.. மேலும் தனது மகனுடன் பேசிய 2 நிமிட தொலைபேசி அழைப்பை சிங் நினைவு கூர்ந்தார். என் மகன் என்னிடம், “அவர் என்னிடம், ‘அப்பா, நாங்கள் பிழைக்க மாட்டோம்; வடிகாலில் நிறைய தண்ணீர் இருக்கிறது’ என்று கூறினார்.. அது தான் அவருடன் நான் பேசிய கடைசி போன் கால்..

நாங்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியபோது, இதுபோன்ற ஒரு பேரழிவு இந்தப் பகுதியைத் தாக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. வரவிருக்கும் வெள்ளம் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் என் குழந்தைகளை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்,” என்று தேவி கூறினார்.

தனது கணவருடன் சேர்ந்து, ஹர்சில் பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாதையான கங்காவதி வரை நடந்தார், ஆனால் பாகீரதி ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு முக்கியமான எல்லை சாலைகள் அமைப்பின் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்த பிறகு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“ஹர்சில் பள்ளத்தாக்குக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் குழந்தைகளை நாங்களே கண்டுபிடிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

உத்தரகாட்சியில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் இதுவரை 70 பேரை மீட்டுள்ளனர், அதே நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி (JCO) மற்றும் எட்டு வீரர்கள் இன்னும் காணவில்லை. தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 9 ராணுவ வீரர்கள் மற்றும் மூன்று பொதுமக்கள் மேலும் மருத்துவ உதவிக்காக டேராடூனுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த மூன்று பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் 8 பேர் உத்தரகாசியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதையும் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Read More : போலி வாக்காளர்கள்.. செல்லாத முகவரிகள்.. பாஜக உடன் சேர்ந்து தேர்தல்களை திருடும் தேர்தல் ஆணையம்.. ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..

RUPA

Next Post

10% பேருக்கு மட்டுமே தண்டனை.. ED வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது.. உச்சநீதிமன்றம் காட்டம்..

Thu Aug 7 , 2025
அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.. அமலாக்கத்துறையின் (ED)சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள், கைதுகள், சொத்துக்கள் பறிமுதல் ஆகியவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது.. இசிஐஆர் எனப்படும், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் எஃப்.ஐ.ஆர், 5000 பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆனால் உங்களால் 10% பேருக்கு மட்டுமே தண்டனை வாங்கி […]
1200 675 19675745 thumbnail 16x9 ed

You May Like