பொதுமக்கள் கவனத்திற்கு….! 900-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 30 சதவீதம் வரை உயர்வு…!

இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை விலைக் குறியீடு கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அறிவிப்பு மூலம் விலை மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.


வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இருதய மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட வழக்கமான மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். பாராசிட்டமால் மாத்திரைகள், சிரப்கள் மற்றும் ஊசி மருந்துகள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. ஆண்டிபயாடிக் மருந்து Azithromycin, வலியைக் குறைக்க கொடுக்கப்படும் Tramadol இன் ஊசி, DPT தடுப்பூசி, ஃபோலிக் அமிலம் தொடர்பான மருந்துகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இதய நோயாளிகளுக்கு டிக்ளோஃபெனாக் மற்றும் அட்டோர்வாஸ்டாடின் வழங்கப்படுகிறது அதன் விலையும் உயர்ந்துள்ளது. அமோக்ஸிசிலின், வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பொதுவான ஆன்டி-பயாடிக், விலை அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குளுக்கோஸ் மற்றும் சோடியம் குளோரைடு வழங்கப்படுகிறது அதன் விலையும் உயர்ந்துள்ளது.

Vignesh

Next Post

திருமண உதவித்தொகைஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு 5,000 ரூபாய்...! எப்படி பெறுவது...?

Mon Apr 3 , 2023
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை நலவாரியத்தில் இணைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் […]
tn govt56 1614058461

You May Like