பெற்றோர்களே ரெடியா..? தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

school 1

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்கவுள்ளது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான முன்னேற்பாடுகள் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தயார் நிலையில் உள்ளன.


5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தச் சிறப்புத் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள், சீருடை, புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் மற்றும் மேலாண்மைக் குழுக்கள் மூலமாகப் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பள்ளிகளில் ‘வகுப்பறை நுழைவுத் திருவிழா’ போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதே இந்த தொடக்கக்கால சேர்க்கை பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

Read More : பெண்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.4,000இல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு..!! புதிய அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

CHELLA

Next Post

கள்ளக்காதலில் மூழ்கிய அக்கா..!! குடும்ப மானத்தை காக்க கொலை..!! தம்பி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!!

Sun Mar 1 , 2026
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், குடும்பக் கௌரவத்தை காப்பதாக கூறிப் பெற்ற அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தம்பி முத்துராஜா (27), அக்காவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே […]
affair murder

You May Like