பெற்றோர்களே உஷார்..!! தொட்டிலில் விளையாடிய பள்ளி மாணவன்..!! கழுத்தில் சேலை இறுக்கியதில் மூச்சுத்திணறி மரணம்..!!

Thottil 2025

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.


சதீஷ் மற்றும் மீனா தம்பதியரின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன் சதீஷின் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். அப்போது குழந்தையைத் தூங்க வைக்க, வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் ஒரு சேலையால் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி தனது சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், அந்தத் தொட்டிலைக் கழட்டாமல் இருந்த நிலையில், சிறுவன் ஹரிஹரன் அதில் விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று மாலை, சதீஷ் தனது மகன் ஹரிஹரனைப் பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் சவாரிக்குச் சென்றுவிட்டார். மீனா, தனது மகள் பவ்யஸ்ரீயுடன் (10ஆம் வகுப்பு மாணவி) அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இதனால், சிறுவன் ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

வழக்கம் போலவே, ஹரிஹரன் மாடியில் இருந்த சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் முறுக்கிக் கொண்டு, சிறுவனின் கழுத்தை இறுக்கியதால் அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பி வந்த தாய் மீனா, மகன் தொட்டிலில் தொங்கிய நிலையில் கழுத்து இறுக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஹரிஹரனை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்தபோது தொட்டிலில் விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More : “நீதான்டி என் உலகமே”..!! இளைஞரின் உருட்டில் மயங்கிய 17 வயது சிறுமி..!! கோயிலுக்குள் வைத்து..!! ஆடிப்போன கடலூர்..!!

CHELLA

Next Post

உச்சம் தொட்ட முருங்கை விலை..!! ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை..!! தக்காளி விலையும் தாறுமாறாக உயர்வு..!!

Mon Nov 24 , 2025
சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில், அத்தியாவசியக் காய்கறிகளான தக்காளி மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, முருங்கைக்காய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழை மற்றும் பனிக்காலம் காரணமாக வரத்துக் குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உச்சம் தொட்ட முருங்கை விலை : தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அதன் […]
Tomato 2025

You May Like