பெற்றோர்களே..!! குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா..? அது அவசியமா..? உண்மையை உடைத்த மருத்துவர்கள்..!!

Cough syrup

மழைக் காலங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், இதற்காக பெரும்பாலான நேரங்களில் இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று குழந்தை நல மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்கியுள்ளனர்.


குழந்தைகள் நல மருத்துவர்கள் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, பெரும்பாலான இருமல் மருந்துகளில் பலதரப்பட்ட ரசாயன மூலக்கூறுகள் கலந்தே தயாரிக்கப்படுகின்றன. இவற்றால் இருமலுக்கு முழுமையான தீர்வு கிடைக்குமா என்பது உறுதியற்றது. மேலும், இந்த மருந்துகளால் சில சமயங்களில் குழந்தைகளுக்கு மார்பு வலியோ அல்லது வேறு உடல் அசௌகரியங்களோ கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த உண்மைகளை பற்றி அறியாமல், பலர் சர்வ சாதாரணமாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்துகளை வாங்கிச் சிறு குழந்தைகளுக்குக் கொடுப்பது தவறு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, இருமல் மருந்துகளை எடுக்காமலேயே, குழந்தைகள் தங்கள் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் விரைவிலேயே உடல்நலம் தேறிவிடுகிறார்கள். எனவே, குழந்தைகளைப் பொறுத்தவரை, குறிப்பாக சிறிய வயது குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது என மருத்துவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

Read More : வி.கே.சசிகலா வீட்டிற்குள் எகிறி குதித்த மர்ம நபர்..!! நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம்..!! போயஸ் கார்டனில் பரபரப்பு..!!

CHELLA

Next Post

அரசுப் பேருந்து மீது மோதிய பைக்..!! தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள்..!! நடுரோட்டில் துடிதுடித்து பலியான இருவர்..!!

Sun Oct 5 , 2025
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய 3 இளைஞர்கள், அதிகாலை நடந்த கோர விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (21), ரஞ்சித் (18), பாரத் (18) ஆகிய மூன்று இளைஞர்களும் குலசேகரன்பட்டினம் கோவிலில் மாலை அணிந்து தசரா விரதத்தை மேற்கொண்டனர். திருவிழா […]
1557133 accident 2

You May Like