தேவையான பொருட்கள்:
பாகற்காய்- கால் கிலோ
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
புளி- கோலி அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய்-3
கருவேப்பிலை -சிறிதளவு
கடுகு, வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
பின்னர் பார்க்க காயை நீல வாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து புளியை கரைத்து ஊற்றி வேக விட வேண்டும். பாகற்காய் நன்றாக வெந்த பிறகு புளி கரைசல் ரசம் பதம் வந்தவுடன் அடுப்பை மிதமாக தீயில் வைக்க வேண்டும்.
அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.
இப்போது சூப்பரான பாகற்காய் ரசம் தயாராகிவிட்டது. இதை சாதத்துடன் சாப்பிடலாம். கிணற்றில் ஊற்றி சூப் போடவும் குடிக்கலாம் ஆகவே பாகற்காயின் முழு பலனும் தற்போது நமக்கு கிடைக்கும்.