மக்களே உஷார்!!! சென்னையில் போலி பட்டா மற்றும் அரசு ஆவணங்களை தயாரிக்கும் கும்பல்..!

சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார்.


இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் ஜாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், நில அளவை பட்டா மற்றும் அரசு பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற போலி ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். 10க்கும் அதிகமான ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று ஆள் மாறாட்டம், மோசடி, போலி ஆவணம் தயார் செய்தல், பத்திர ஆவணங்களை தயார் செய்தல் போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் இவர்கள் யார், யாருக்கெல்லாம் எந்தெந்த அரசு ஆவணங்களை போலியாக தயார் செய்து வழங்கினார்கள், என்ற விதத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsnation_Admin

Next Post

தமிழகத்தில் ஆதார்- மின் இணைப்பு வாபஸ்...! இல்லை என்றால் போராட்டம் நடைப்பெறும் என அறிவிப்பு...!

Mon Dec 5 , 2022
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தினையும், மின்கட்டண உயர்வினையும் வாபஸ் பெறாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்தை நடத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதிலிருந்து மின் கட்டண உயர்வுக்குத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆதார் இணைப்பு மூலம் எந்த விதமானப் பாதிப்பும் இல்லை என்று அரசு தெரிவித்தாலும், […]
tnebaadhar 1665682258566 tile 1668856807

You May Like