ஜோதிடத்தின்படி, உண்மையில் பிறந்த மாதம் ஒருவரின் தன்மை, சிந்தனையின் தனித்துவம் மற்றும் சமூக உறவுகளில் ஈடுபடும் விதத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள், இயற்கையாகவே சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக அதற்கேற்ப செயல்படும் திறனை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தன்மை, அவர்களை சிக்கலான சூழல்களில் கூட தைரியமாக முன்னேற வைக்கும். அந்த வகையில், சில மாதங்களில் பிறந்தவர்கள் தந்திரமான செயல்பாடுகளால் முன்னிலை வகிக்கிறார்கள்.
பிப்ரவரியில் பிறந்தவர்கள், அவர்களுடைய மனத் தெளிவும், உணர்ச்சி நுண்ணறிவும் காரணமாக, மற்றவர்கள் பார்வையில் படாத சிக்கல்களை கூட அழுத்தமின்றி கையாள்வதில் வல்லவர்கள். இவர்களிடம் மெல்லிய பேசும் திறனும், கணிப்பாற்றலும் இருப்பதால், பேசிக்கொண்டு பல விஷயங்களை சாதித்து விடுகிறார்கள். புதுமையான எண்ணங்கள், புது வழிகளை தேடும் மனப்பான்மை ஆகியவை இவர்களை தந்திரமான நெறிகளில் பயணிக்கச் செய்கின்றன.
மே மாதத்தில் பிறந்தவர்கள், இரட்டை முகத்தன்மை கொண்டவர்களாம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கணிக்க முடியாத வண்ணம் செயல்படுவார்கள். பேச்சுத் திறனை நுணுக்கமாக பயன்படுத்தி, நினைத்தது போல் விஷயங்களை நடத்தி விடுகிறார்கள். தங்கள் இலக்குகளை அடைவதில், நேரடியான முயற்சிகளுக்கு பதிலாக தந்திரமான பாதைகளை தேடி, அதில் வெற்றியை காண்பதையும் தெரிந்தவர்களே.
செப்டம்பரில் பிறந்தவர்கள், ராஜதந்திரமான அணுகுமுறைகளை உடையவர்கள். அவர்களின் நுணுக்கமான மனப்பாங்கும், மற்றவர்களின் உணர்வுகளை வாசிக்கும் திறனும் இவர்களுக்கு பலம் அளிக்கின்றன. பொதுவாகவே அவர்கள் நேரடியாக தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால், தேவையான இடத்தில் தேவையானவர்களை உபயோகப்படுத்தும் திறமை அவர்களுக்கு உண்டு.
அக்டோபரில் பிறந்தவர்கள் தங்களைப் பற்றி கூறிக்கொள்வதை விரும்பாதவர்கள். அதே நேரத்தில், பிறரைப் பற்றிய தகவல்களை அவர்களே சேகரிக்கின்றனர். மர்மம் நிறைந்த இவர்களின் நுண்ணறிவும், மனித மனங்களை வாசிக்கும் திறனும், சூழ்நிலைகளை தங்கள் வசப்படுத்தும் ஒரு வலிமையாகும். அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லமாட்டார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போலவே முடிவுகள் செல்லும். பேச்சில் இருக்கும் வசீகரமும், தந்திரமான சிந்தனையும் அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன.
Read More : உப்பில்லா பிரதாசம்..!! இந்த கோயிலுக்கு சென்று வேண்டினால் அப்படியே நிறைவேறுமா..? எங்கிருக்கு தெரியுமா..?