தென்மாவட்ட மக்களே.. ஜன.1 முதல் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்..! நோட் பண்ணுங்க..

train

சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே தினம் தோறும் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசிப்பதாலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் பயணமே அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், தினசரி 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ஜனவரி 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் மற்றும் கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 1 முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), தற்போது மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு எழும்பூரை வந்தடைந்து வருகிறது. புதிய மாற்றத்தின்படி, ஜனவரி 1 முதல் இந்த ரயில் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.55 மணிக்கே சென்னை எழும்பூரை சென்றடையும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694), தற்போது இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும். வருகிற ஜனவரி 1 முதல், இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16102) ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், ஜனவரி 1 முதல் காலை 6.05 மணிக்கே தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில்களின் புதிய நேர அட்டவணையை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Read more: Flash : பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கம்.. அன்புமணி அறிவிப்பு..

English Summary

People of the southern district.. The timings of important trains will change from Jan. 1..! Take note..

Next Post

கனடாவில் 2 வாரங்களுக்குள் 2 இந்திய மாணவர்கள் கொலை; யார் அவர்கள்? பீதியில் மக்கள்..!

Fri Dec 26 , 2025
கனடாவில் இரண்டு வார கால இடைவெளியில் 2 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையிலான சூழ்நிலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று காவல்துறை கூறினாலும், இது இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய சம்பவத்தில், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் இந்திய முனைவர் பட்ட மாணவர் சிவங்க் அவஸ்தி சுட்டுக் கொல்லப்பட்டார். முந்தைய வழக்கில், ஹிமான்ஷி குரானா என்ற இந்தியப் பெண் கொலை செய்யப்பட்டார். […]
canada student dead

You May Like