இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கிய அடையாள அட்டையாக இருந்து வருகிறது. இந்த ஆதார் கார்டு அரசு நல திட்டங்களின் பயன்களை பெறுவது முதல் வங்கி சேவைகளை பெறுவது வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. அதே போல் இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவருக்கும் பான் கார்டு முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. பான் கார்டு என்பது 10 இலக்க தனித்துவ எண்ணெழுத்து கொண்ட அடையாள அட்டையாகும். இந்த பான் கார்டுகளை வருமானவரித்துறை வழங்குகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை அனைவருமே பான் கார்டு – ஆதார் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் ஆதார் கார்டு- பான் கார்டு இணைப்புக்கான கடைசி தேதியையும் நீட்டித்துள்ளது.
அந்த வகையில் ஆதார் கார்டு – பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதி ஆகும். அதாவது வருமான வரி துறையின் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhar இணையதளத்தில் ஆன்லைனிலேயே இணைத்துக் கொள்ளலாம். இருப்பினும் இதனை இணைப்பதற்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்நிலையில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டுகளை இணைக்காதவர்களின் பான் கார்டு செயல் இழந்து விடும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.