“மக்களே.. இன்றுதான் கடைசி நாள்”..!! ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

voter list

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.


புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New Voter Registration’ பகுதியைத் தேர்வு செய்து ‘படிவம் 6’-ஐப் (Form 6) பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே பட்டியலில் இருப்பவர்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதியில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் ‘Correction of Entries’ பகுதிக்குச் சென்று ‘படிவம் 8’-ஐப் பயன்படுத்தலாம். இந்த எளிய டிஜிட்டல் முறை மூலம் மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை சுமார் 12.80 லட்சம் பேர் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதே நேரத்தில், முறையான கள ஆய்வின் (SIR) அடிப்படையில், உயிரிழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி 5.43 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றுடன் விண்ணப்பம் பெறும் பணி நிறைவடைந்ததும், ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இது குறித்த முதற்கட்ட அறிவிப்புகள் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. அனைத்துச் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகளும் முடிவடைந்த பின், தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான ‘இறுதி வாக்காளர் பட்டியல்’ வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரும் 2026 தேர்தலுக்கான அடிப்படை ஆவணமாக இது கருதப்படுவதால், அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் இந்தப் பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

Read More : 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை..!! மாதம் ரூ.53,000 சம்பளம்..!! சென்னையிலும் காலியிடங்கள்..!!

CHELLA

Next Post

14 வயது காதலியை காட்டுக்குள் வைத்து கதற கதற பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்..!! கொடூரமாக கிடந்த உடல்..!!

Sun Jan 18 , 2026
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற […]
Kerala 2025

You May Like