’பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’..!! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு..!!

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

’பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’..!! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு..!!

இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் – SDPI, PFT” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CHELLA

Next Post

ஆன்லைன் கேம்..!! பணம் வென்றவர்களுக்கு நோட்டீஸ்..!! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!!

Thu Sep 29 , 2022
ஆன்லைன் விளையாட்டில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ. 58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனால், அவர்கள் […]
ஆன்லைன் விளையாட்டுகள்..!! செக் வைத்த மத்திய அரசு..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

You May Like