மீண்டும் முடங்கிய பிஎஃப் இ- பாஸ்புக் சேவை!… ட்விட்டரில் அதிருப்தியை தெரிவிக்கும் சந்தாதாரர்கள்!…

கடந்த சில நாட்களாக பிஎஃப் இணையதளத்தில் இ பாஸ்புக் வசதியை பயன்படுத்த முடியவில்லை என்று ட்விட்டரில் சந்தாதாரர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


வருங்கால ஓய்வூதிய அமைப்பான பிஎஃப் நாடு முழுவதும் 5 கோடிக்கு அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ளது.பல்வேறு வகையான இணைய சேவை வசதிகளை வழங்கி வருகிறது. அதாவது சந்தாதாரர்கள் செலுத்தும் தொகை மட்டும் அதற்கான வட்டி மற்றும் சந்தாதாரர்கள் பணிபுரியும் நிறுவனம் செலுத்திய தொகை ஆகிய விவரங்களை இந்த இ பாஸ்புக் வசதி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
EPFO இல் டெபாசிட் செய்யப்பட்ட இந்தத் தொகையில், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவீர்கள். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.15% ஆக நிர்ணயித்துள்ளது.

ஏனெனில் ஓவ்வொரு மாதமும் சந்தாதாரரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அவரின் நிறுவனத்தில் செலுத்தும் ஆகியவை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா, இல்லை என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இதில் ஏதாவது பிரச்னை இருந்தால் உடனடியாக அது குறித்து புகார் அளிக்கவும் ஏதுவாக இருக்கும். இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பிஎஃப் இணையதளத்தில் இ பாஸ்புக் வசதியை பயன்படுத்த முடியவில்லை என்றும் இ-பாஸ்புக் சேவை பெறுவதில் சிக்கல் உள்ளதாக சந்தாதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சேவை சிக்கலினால் இ பி எஃப் சந்தாதாரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் போர்டல் மூலம், உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், உறுப்பினர்கள் தங்கள் இ-பாஸ்புக்குகளை EPFO இணையதளம் அல்லது உமாங் செயலி மூலம் பதிவிறக்கம் செய்ய முடியாது.

சில EPF உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளனர். இதை பிரச்னையை வருங்கால வைப்பு நிதி அமைப்புப் உடனடியாக சரி செய்ய வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். டிவிட்டரில் புகார் தெரிவித்த பெரும்பாலானவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யப்படும் என்றும், இந்த புகார் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்திருப்பதாகவும் பதில் அளித்துள்ளனர். EPF உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டனர். தற்போது மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை விரைவாக சரி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

KOKILA

Next Post

முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடல்!... லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?... கணக்கெடுப்பு வேலைகள் தீவிரம்!...

Wed Apr 26 , 2023
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரும் நோக்கில், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். அதாவது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் […]
tasmac 1

You May Like