வைரல் வீடியோ- ’’பசுவின் வாயைக் கவ்விய பிட்புல்’’ … பசுவை விடுவிக்க நடந்த போராட்டம்

சமீப காலமாக நாய்கள் தாக்கும் வீடியோக்கள் பீதியடையச் செய்யும் நிலையில் ’’பிட்புல்’’ நாய் பசுவின் வாயைக்கவ்விய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாவட்டம் கான்பூரில் பசுவை பிட்புல் என்ற வகையைச் சேர்ந்த நாய் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பசுவின் தாடைப் பகுதியை கடித்துக்கொண்டிருக்கின்றது அந்த பிட்புல். வலியால் துடிக்கும் மாடு கத்திக் கொண்டே இங்கும் அங்குமாய் நடக்கின்றது. இதைப்பார்த்த பொதுமக்களுக்கு அருகில் செல்லவே முதலில் பயமாய் இருந்துள்ளது எனினும் பசுவை விடுவிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.


சில நேரத்திற்குப் பின்னர் நாயை குச்சியால் தாக்கி பசுவை மீட்டனர். இந்த சம்பவம் பிறரை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. மனிதர்களை இது போல தாக்கியிருந்தால் பயங்கரமான சம்பவமாக மாறியிருக்கும். பசுவின் வாயைக் கவ்விய வீடியோ சமூக வலைத்தலங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.

’’பிட்புல் ’’ ரக நாய் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல நாடுகள் தடை அறிவித்தது. இந்த வீடியோ சுமார் 7500 பேர் பார்த்துள்ளனர். சிலர் இந்த நாய் வளர்ப்பதற்கு உரிமம் தேவையில்லையா ? இது போன்ற நாய்களை ஏன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தவில்லை? மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள். நாய் வளர்த்தால் அதற்குரிய இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என பலரும் டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

Next Post

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு..! வெளியில் வாங்கிக் கொள்ள நோயாளிகளுக்கு அறிவுரை..!

Thu Sep 22 , 2022
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நம்மிடம் கையிருப்பில் […]
Jipmer

You May Like