சமீப காலமாக நாய்கள் தாக்கும் வீடியோக்கள் பீதியடையச் செய்யும் நிலையில் ’’பிட்புல்’’ நாய் பசுவின் வாயைக்கவ்விய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாவட்டம் கான்பூரில் பசுவை பிட்புல் என்ற வகையைச் சேர்ந்த நாய் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பசுவின் தாடைப் பகுதியை கடித்துக்கொண்டிருக்கின்றது அந்த பிட்புல். வலியால் துடிக்கும் மாடு கத்திக் கொண்டே இங்கும் அங்குமாய் நடக்கின்றது. இதைப்பார்த்த பொதுமக்களுக்கு அருகில் செல்லவே முதலில் பயமாய் இருந்துள்ளது எனினும் பசுவை விடுவிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
சில நேரத்திற்குப் பின்னர் நாயை குச்சியால் தாக்கி பசுவை மீட்டனர். இந்த சம்பவம் பிறரை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. மனிதர்களை இது போல தாக்கியிருந்தால் பயங்கரமான சம்பவமாக மாறியிருக்கும். பசுவின் வாயைக் கவ்விய வீடியோ சமூக வலைத்தலங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
’’பிட்புல் ’’ ரக நாய் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல நாடுகள் தடை அறிவித்தது. இந்த வீடியோ சுமார் 7500 பேர் பார்த்துள்ளனர். சிலர் இந்த நாய் வளர்ப்பதற்கு உரிமம் தேவையில்லையா ? இது போன்ற நாய்களை ஏன் உரிமையாளர்கள் கட்டுப்படுத்தவில்லை? மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள். நாய் வளர்த்தால் அதற்குரிய இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என பலரும் டுவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.