வீட்டின் நுழைவு வாயிலில் குதிரை காலணி வைத்துப்பாருங்கள்!. அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும்!

horseshoe 11zon

வாழ்வில் சில எளிய வாஸ்து சாஸ்திர மாற்றங்களைச் செய்வதன் மூலம் செழிப்பைக் காணச் செய்யலாம். அப்படி சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளை காண்போம். உங்கள் வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வீட்டிற்குள் நுழையும் இடத்திற்கு நேரே உள்ள சுவரில் தெய்வத்தின் படம் வைப்பது சிறந்தது. அதாவது பிரதான கதவுக்கு எதிரே உள்ள சுவரில் காலியாக விடாமல் தெய்வத்தின் படம் வைப்பது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்.


குவார்ட்ஸால் செய்யப்பட்ட ஸ்படிக உருண்டைகளை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது மிகவும் நல்லது. இவை எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியவை. நல்ல உறவுகளுக்கு இளஞ்சிவப்பு நிற கிறிஸ்டல்களையும், சிறந்த நிதிக்கு ஆரஞ்சு நிற கிறிஸ்டல்களையும் வைப்பது சிறப்பு. உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் நுழைவாயிலில் குதிரை காலணியை வைப்பது சிறந்த அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். குதிரை காலணியை பிரதான நுழைவாயில் தலைகீழாக தொங்க விடாமல் (அவை எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்) நேராக ஆணி அடித்து வைப்பது நேர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும்.

நிதி சிக்கல்கள், நெருக்கடிகள், உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் ஓடாத கடிகாரங்கள், உடைந்த கண்ணாடிகள் ஆகியவற்றை அகற்றி விடுவது நல்லது. இவை எதிர்மறை ஆற்றல்களை வளர்க்கும். வீட்டில் நிதி சிக்கல்களை உருவாக்கும். துரதிஷ்டங்களை கொண்டு வந்து சேர்க்கும். எனவே உடைந்த எதையும் வீட்டில் வைக்காமல் அவ்வப்போது அகற்றி விடுவது நல்லது. உங்கள் வீட்டில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் நீங்கள் குடியிருந்தால் அங்குள்ள நீச்சல் குளம் சுத்தமாகவும், புதிய தண்ணீரைக் கொண்டதாகவும் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை போக்க சிறந்த வண்ணங்களை பயன்படுத்துவது நல்லது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளம் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்கள் நம் வீட்டு சுவர்களை அலங்கரிக்க எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நம்மை செழிக்க வைக்கும்.

Readmore: உங்கள் கனவில் அடிக்கடி பல்லி வருகிறதா.. அதிர்ஷ்டமா..? துரதிஷ்டமா..? தெரிஞ்சுக்கோங்க பாஸ்..

KOKILA

Next Post

முதுகு வலி பாடாய்ப்படுத்துதா?. பப்பாளி இலையை வைத்து இப்படி பற்றுப்போடுங்கள்!. ஈஸி டிப்ஸ்!

Tue Jun 3 , 2025
தற்போது சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரை அனைவருக்கும் அடிக்கடி முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு கவலைப்படும்படியான காரணம் எதுவும் இருக்காது. என்றாலும் பொதுவாக நமது தினசரி நடவடிக்கைகளை நிறுத்தாமல் இயல்பாக இருப்பதே பயன் தரும். தானாகவே சில வாரங்களில் சரியாகும் இந்த வலி, பின்பு மீண்டும் மீண்டும் வரும் தன்மையைக் கொண்டது என்கின்றனர். இப்படி வரும்போது அதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை […]
back pain

You May Like