விமான விபத்து எதிரொலி!. புதிய விதிகள் அமல்!. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி!.

flight new rules

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு , விமான நிலையங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள விமானப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வரைவு விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் முன்மொழியப்பட்ட விமான விதிகள், நேற்று (ஜூன் 18) அறிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியமிக்கப்பட்ட விமான நிலைய மண்டலங்களில் உயர வரம்புகளை மீறும் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் பிற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறையில் வந்தால், விமானப் போக்குவரத்துக்கு அபாயமாக இருக்கக்கூடிய அமைப்புகளை அகற்றுவதற்கான சட்ட, நிர்வாக அதிகாரங்கள் மேலும் தெளிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அதிகாரிகள், இத்தகைய தடைகளை காலமுறையாக அகற்றுவதற்கான அதிக அதிகாரங்களுடன் செயல்பட முடியும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சமீபத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்துக்கும், மேலும் பரவலாக எழுந்துள்ள விமானப் பாதை பாதுகாப்பு (flight path safety) குறித்த கவலைகளுக்கும் பதில் அளிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட உயர வரம்புகளை மீறிய எந்த அமைப்பும் கண்டறியப்பட்டால், தொடர்புடைய விமான நிலையத்தின் பொறுப்பதிகாரியால் நோட்டீஸ் வழங்கப்படும். உரிமையாளர்கள் கட்டமைப்பின் பரிமாணங்கள் மற்றும் தளத் திட்டம் உள்ளிட்ட விரிவான தகவல்களை 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இடிப்பு அல்லது உயரக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிகள், விமான பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைபடுத்தி, விமான நிலைய சுற்றுப்புறங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் (DGCA) அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி, உயர வரம்பு மீறல் உறுதிப்படுத்தப்பட்டால், உரிமையாளருக்கு அந்த கட்டடத்தை இடிக்கவோ அல்லது மரத்தை வெட்டவோ உத்தரவு பிறப்பிக்கலாம். இந்த உத்தரவை 60 நாட்களுக்குள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில், சரியான காரணங்கள் வழங்கப்பட்டால், கூடுதலாக மேலும் 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும்.

விதிகளில் முக்கியமான 5 விஷியங்கள்: தளங்களை நேரில் சரிபார்க்க (physical verification) அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகின்றன, இது பகல்பொழுதுகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். அமைப்பின் உரிமையாளருக்கு முன்கூட்டியே தகவல் வழங்கி அதிகாரிகள் அந்த இடத்திற்குள் நுழைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், உரிமையாளர் ஒத்துழைக்கவில்லை என்றால், அதிகாரிகள் கிடைக்கக்கூடிய பதிவுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடரலாம். மற்றும் வழக்கை DGCA-விடம் கொண்டு செல்லலாம்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், அதனை உரிமையாளர் நிறைவேற்றத் தவறினால், அந்த விஷயத்தை விமான நிலைய பொறுப்பதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு (District Collector) அறிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, அமைப்பை இடிக்கும் அல்லது மரங்களை வெட்டும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார். இந்த செயல்முறை, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்ட கட்டமைப்பின் அடிப்படையில் நடைபெறும்.

இந்த வரைவு மேல்முறையீடு செய்வதற்கான ஒரு வழிமுறையையும் வழங்குகிறது. இதன்படி, பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள், கட்டிடம் இடிக்கப்படுவது அல்லது மரம் வெட்டப்படுவது போன்ற உத்தரவுகளை எதிர்த்து, பரிந்துரைக்கப்பட்ட படிவம், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ரூ.1,000 கட்டணம் செலுத்தி முதல் அல்லது இரண்டாவது மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையிடலாம்.

முக்கியமாக, பாரதீய வாயுவான் அதினியம், 2024ன் பிரிவு 22ன் கீழ் வழங்கப்படும் இழப்பீடு, அதிகாரப்பூர்வ உத்தரவுகளை கடைப்பிடிக்கும் நபர்களுக்கே மட்டுமே வழங்கப்படும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு வெளியான பின்னர் சட்டவிரோதமாக கட்டப்பட்ட எந்தவொரு அமைப்புக்கும் இழப்பீடு வழங்கப்படமாட்டாது.

அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 20 நாட்களுக்குள், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் மற்றும் பரிந்துரைகள் அளிக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள், நேரடியாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் (Director-General of Civil Aviation) அனுப்பப்படலாம்.

Readmore: காசாவின் அவலம்!. 2 வயது குழந்தை குடிநீருக்காக கேன்களுடன் ஓடும் பரிதாபம்!. வைரலாகும் வீடியோ!

KOKILA

Next Post

ஒயாத குண்டு மழை.. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 140 பேர் உயிரிழப்பு..!! உணவுக்காக காத்திருந்தவர்கள் தொடர்ந்து பலியாகும் துயரம்

Thu Jun 19 , 2025
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]
Gaza killed 1

You May Like