“பிளீஸ் சார்.. விட்ருங்க போதும்”..!! உதவிப் பேராசிரியரிடம் கதறிய கல்லூரி மாணவி..!! வீடியோவை காட்டி விடாமல் டார்ச்சர்..!!

Rape 2025 5

கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.


இந்தியாவில் பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறையும், காவல்துறையும் தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையே காதலிக்கு சில இளைஞர்கள் கர்ப்பமாக்கி போக்சோ வழக்கில் சிக்கியுள்ளனர். அதேபோல், பள்ளி – கல்லூரிகளிலும் படிக்கும் மாணவிகளை ஆசிரியர்களே பலாத்காரம் செய்யும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது கல்லூரி மாணவி ஒருவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் படித்து வருகிறார். இவர், அந்த கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தான், சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளேன்.

நான் பி.எச்.டி. படித்து வரும் நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக ராஜா பணியாற்றி வருகிறார். இவர், என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை காட்டி, பாலியல் ரீதியாகவும், பணம் கேட்டும் மாணவியை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மாணவியின் இந்த பரபரப்பு புகாரை அடுத்து, உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தீவிரமாக விசாரித்து வருகிறார். உதவி பேராசிரியர் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : அஜித்துக்கு இப்படி ஒரு தங்கமான மனசா..? இந்த மிகப்பெரிய ஹிட் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்..!! ஏன் தெரியுமா..?

CHELLA

Next Post

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி பலாத்காரம் பண்ணிட்டாரு”..!! புகாரளித்த பெண்ணை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிபதி..!!

Sat May 31 , 2025
திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் ஆதாரமற்றவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ஆண் மீது வழக்கை தொடர்வது என்பது “நீதிபதியை நக்கல் செய்வதற்கு சமமானது” எனக் கடுமையாக சாடியுள்ளது. இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் பாலியல் நடத்தை மற்றும் பிடிவாதமான மனநிலை குறித்து அறிந்தபோது, […]
Rape 2025 4

You May Like