தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை சார்பாக அந்த தேர்வு முடிவுகள் வெளிவந்தது. மேலும், இந்த தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களும் மிகவும் ஆர்வமாக காணப்பட்டனர். இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது கொடுத்த செல்போன் எண்ணிற்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவயானி. இவர் தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகை தேவயானியின் மூத்த மகள் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் 12ஆம் வகுப்பில் 600-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.