பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மனகசப்பை போக்க சமாதான முயற்சிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இரு தரப்பும் சுமுகமாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ராமதாஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த பிரச்சனையை மேலும், அதிகப்படுத்தவே செய்தது. தனது மகன் அன்புமணி மீதான குற்றச்சாட்டை நான்கு சுவற்றுக்குள் வைத்து பேசியிருக்கலாம் என்றும், பொதுவெளியில் வைத்து அவரை அவமானப்படுத்தி விட்டதாகவும், பாமகவினரே கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அன்புமணியின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாமக பொதுக்குழுவை கூட்டலாம் என சில வழக்கறிஞர்கள் அவரிடம் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், பொதுக்குழு குறித்து அன்புமணி இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. நிர்வாகிகள் பலரும் அன்புமணியின் பக்கம் நிற்பதால், அதிருப்தியில் உள்ள ராமதாஸ், நேரடியாக மக்களை சந்தித்து தன்னுடைய நியாயத்தை எடுத்துரைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, பாமக முழுமையாக அன்புமணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால், அவர் தலைமையிலேயே சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக – அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறும் என்றும் தேர்தலுக்கு முன்னதாக வன்னிய இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து திமுகவுக்கு எதிராக பரபரப்புரையை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “என்கிட்ட இதெல்லாம் கேட்கலாமா”..? விஜய் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் கொடுத்த பதில்..!!