பாமக நிறுவனரை சந்தித்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மரியாதை நிமித்தமாகவே ராமதாஸை சந்தித்தாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ராமதாஸை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். தமிழ்நாட்டிற்கு தேவையான முடிவை ராமதாஸ் நிச்சயம் எடுப்பார். பாமகவில் நிலவும் குழப்பத்திற்கு திமுக காரணம் இல்லை.. பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுகவிற்கு என்ன தேவை இருக்கிறது.. எதற்காக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.. பாமகவில் இருக்கும் குழப்பத்திற்கு பாஜக தான் காரணம்..” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. எங்கள் கூட்டணி தான் ஆட்சியமைக்கப் போகிறது.. கூட்டணி என்று சொல்லிவிட்டு அந்த கட்சியை முடிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. அதிமுகவை கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்யப்போகிறார்கள். அதிமுகவினர் அண்ணா பலிகொடுத்து அரசியல் செய்கின்றனர். அப்படி என்ன பயம் பாஜகவிடம்.. அண்ணாவை கொச்சைப்படுத்தியதற்கு ஏன் கண்டன அறிக்கை வெளியிடவில்லை..
பாமக திமுக கூட்டணியில் வருவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ நான் கூட்டணி பற்றி பேச வரவில்லை.. நான் நலம் விசாரிக்க வந்தேன். கூட்டணி தொடர்பான முடிவுகள் திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் தான் எடுப்பார். அதில் நாங்கள் முடிவெடுக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டணி தான் திமுக கூட்டணி..” என்று தெரிவித்தார்.