விஷமாகும் உணவுகள்..!! மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் ஒளிந்திருக்கும் பேராபத்து..!! மக்களே உஷார்..!!

cooking kitchen

இன்றைய அதிவேக வாழ்க்கை சூழலில், நேரமின்மை காரணமாக நாம் அவசர அவசரமாக உணவுகளைச் சமைத்துவிட்டுப் பணிக்குச் செல்கிறோம். இதனால், வெகு நேரத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவு குளிர்ச்சியடைந்துவிடுகிறது. இந்த உணவை வீணாக்காமல் இருக்க, பலர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் மீண்டும் சூடாக்கிச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


சில உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்களை மீண்டும் சூடாக்கும்போது, அவற்றின் சத்துக்கள் குறைந்து, சில சமயங்களில் அவை உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மீண்டும் சூடாக்கும்போது கவனம் தேவை :

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, சமைத்த உணவை நீண்ட நேரத்திற்குப் பிறகு உட்கொள்ளும்போது, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க மீண்டும் சூடுபடுத்துவது சிறந்த முறைதான். ஆனால், அது சரியாக சூடுபடுத்தப்பட்டால் மட்டுமே பாதுகாப்பானது. இந்த செயல்பாட்டை சரியான முறையில் செய்தால் மட்டுமே உணவைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

இருப்பினும், உணவை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் சூடுபடுத்துவது, செரிமான மண்டலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தலாம். உதாரணமாக, சிக்கன் மற்றும் முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை மீண்டும் சூடாக்கும்போது, அதில் உள்ள புரதத்தின் அமைப்பு மாறிவிடுகிறது. இதை ‘புரத டிநேச்சுரேஷன்’ என்று அழைக்கிறார்கள். இந்தச் செயல்முறை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவைக் கணிசமாக குறைக்கிறது.

எவை ஆபத்தானவை..?

சாதம் மற்றும் பாஸ்தா : சமைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, சாதம் மற்றும் பாஸ்தா போன்ற தானிய உணவுகளில் பாக்டீரியாக்கள் வளர தொடங்குகின்றன. இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினாலும், அனைத்து பாக்டீரியாக்களும் முழுமையாக அழிக்கப்படுவதில்லை. இது ஃபுட் பாய்சன் (Food Poisoning) போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உருளைக்கிழங்கு உணவுகள் : உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை மீண்டும் சூடுபடுத்துவது ‘அக்ரிலாமைட்’ என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கொண்டதாக உள்ளது.

எண்ணெயில் வறுத்த உணவுகள் : பக்கோடாக்கள் அல்லது பூரிகள் போன்ற எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்களை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும்போது, அவற்றின் அமைப்பும், சுவையும், மிருதுவான தன்மையும் குறைவதுடன், தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளாகவும் மாற வாய்ப்புள்ளது.

WHO-வின் முக்கிய ஆலோசனை :

எந்தவொரு சமைத்த உணவையும் மீண்டும் சூடாக்கும்போது, அதன் மையப் பகுதி குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸுக்கு சூடேற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இந்த வெப்ப நிலையே உணவில் செழித்து வளரக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை கொல்ல உதவுகிறது. இருப்பினும், இந்த செயல்பாட்டை ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

ஏனென்றால், மீண்டும் மீண்டும் சூடாக்குவது உணவின் ஒட்டுமொத்த தரம் மற்றும் பாதுகாப்பைச் சமரசம் செய்துவிடும். எனவே, சமைத்த உணவுகளைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் கையாள, இந்த எளிய விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.

Read More : மனிதனின் ஆயுளை நீட்டிக்கும் மாத்திரை..!! இனி 150 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம்..!! அசத்தும் சீன நிறுவனம்..!!

CHELLA

Next Post

இயற்கை அழகுக்கான ரகசியம்..!! சருமப் பொலிவு, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 5 மூலிகை தேநீர்கள்..!!

Wed Nov 12 , 2025
ஜிம், பிரத்யேக டயட் மட்டுமின்றி, உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் மூலிகை தேநீர்களும் (Herbal Teas) இயற்கையான அழகு மற்றும் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகின்றன. இந்த மூலிகை டீக்களை தொடர்ந்து குடிப்பதன் மூலம், எந்தவிதச் செயற்கை பராமரிப்புமின்றிப் பொலிவான சருமத்தையும், அடர்த்தியான கூந்தலையும் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் துளசி தேநீர் : பாரம்பரியமாக புனிதமாக கருதப்படும் துளசியில், ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கப் […]
Strong Tea 2025 10 f56e70148549e4325ea8f17c6470b021 1

You May Like