டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் ஈக்கோ ஸ்போர்ட் காரைக் கண்டுபிடிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது..
வாகனத்தைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை 5 தனிப்படைகளை நியமித்துள்ளது., அதே நேரத்தில் அண்டை மாநிலங்களான உ.பி. மற்றும் ஹரியானா காவல்துறையினரும் அதிக விழிப்புணர்வைப் பேணவும் தேடலில் உதவவும் எச்சரிக்கப்பட்டுள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேக நபரான டாக்டர் உமர் உன் நபியின் பெயரில் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் நபி, டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு ஆண்டு நிறைவையொட்டி சக்திவாய்ந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. பயங்கரவாத தொகுதி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் எட்டு பேரின் விசாரணை மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் உரையாடிய பின்னர் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டி வந்த ஓட்டுநரின் அடையாளம் உட்பட பல குறிப்பிடத்தக்க விவரங்கள் தெரியவந்துள்ளன.
உமர் உன்-நபி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.. இந்த சம்பவம் நடந்த ஃபரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. காரில் டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருட்களுடன் உமர் டெல்லிக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உமரின் தாயாரின் மாதிரிகளை சேகரித்து விரிவான விசாரணைக்காக FSL குழு அனுப்பியது.
பயங்கரவாத சதித்திட்டம் இருப்பதாக துப்புகள் கிடைத்ததை அடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இந்த வழக்கை முறையாக கையகப்படுத்தியுள்ளது, மேலும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது..



