புத்தாண்டு கொண்டாட்டம்! சேட்டை காட்டிய இளைஞர்கள் தட்டி தூக்கிய போலீஸ்!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் நோய் தொற்று பரவல் அதிகரித்ததால் கடந்த 2020 ஆம் வருடம் புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்த 2021 மற்றும் 22 உள்ளிட்ட 2 வருடங்களுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.


நோய் தொற்று பரவலை காரணம் காட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் கலை இழந்து காணப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த வருடம் நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்து விட்டதை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டி இருக்கிறது. உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளில் புத்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2023 ஆம் ஆண்டு மிக உற்சாகத்துடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் வரவேற்று இருக்கிறார்கள்.

அதேபோல இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை சந்திப்பில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்த விதமான அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னை மாநகர காவல்துறை பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த வகையில், கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். இந்த 2023 ஆம் ஆண்டு நல்லதொரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டனர். அதோடு நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணி வரையில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் அதீத உற்சாகத்தால் சாலைகளில் வாகனத்தை ஒட்டிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிவேகமாக, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், வாகனத்தை இயக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தலைநகர் சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனைகளில் மது போதையில் வாகனம் இயக்கி வந்த, 252 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், மிக ஆபத்தான முறையில் வாகனம் இயக்கியதாக 22 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாநகர முழுவதும் ஒட்டுமொத்தமாக 276 வாகனங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Next Post

ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு...!

Sun Jan 1 , 2023
திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண்  கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, அந்த பெண் எப்படி காணாமல் போனார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை […]
eesha

You May Like