fbpx

BREAKING | விவசாயிகளுக்கு ஜாக்பாட்..!! ரூ.6 லட்சம் வரை மானியம்..!! முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்களின் பயன்கள் என்ன..?

தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 4 வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டு பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

➥ பசுமை தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.

➥ 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வசதி அளிக்க ரூ.241 கோடி ஒதுக்கீடு.

➥ கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.249ஆக உயர்வு.

➥ உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.

➥ உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.

➥ முதலமைச்சரின் மருந்தகம் போல, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.  

➥ இந்த மையங்களில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும். மேலும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

➥ ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்களை அமைக்க 30% மானியம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.

Read More : BUDGET | ’விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை பரிசுத்தொகை’..!! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

English Summary

Like the Chief Minister’s Pharmacy, Chief Minister’s Farmer Welfare Service Centers will be set up.

Chella

Next Post

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்தொகை 40%லிருந்து 60%ஆக உயர்வு.. அமைச்சர் அறிவிப்பு..

Sat Mar 15 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்கா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : 63,000 உழவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.22 கோடி கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். 20 மாவட்டங்களில் மலைவாழ் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், 2,335 ஊராட்சிகளில் […]

You May Like