தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
➥ உழவர்களுக்கு இலவச மின் இணைப்புக்கான கட்டண தொகையாக ரூ.8,188 கோடி ஒதுக்கீடு.
➥ ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன் வளங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
➥ 1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு.
➥ ஊரகப் பகுதிகளில் நீர் நிலைகளில் ஒரு கோடி மீன்விரலிகள் இருப்பு வைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு.
➥ கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
➥ வேளாண் துறைக்கு மொத்த நிதியாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு.
Read More : BUDGET BREAKING | நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50% மானியம்..!! எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சூப்பர் அறிவிப்பு..!!