fbpx

 சினிமாவால்தான் கலாச்சாரம் சீர்கெடுகின்றது… புதியதமிழகம் கட்சித் தலைவர் காட்டம்!

தற்போதைய தமிழ் சினிமாக்களால்தான் தமிழ் கலாச்சாரம் சீர்கெடுகின்றது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி காட்டமாக பதிவிட்டுள்ளர்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில், தமிழ் இளைஞர்ளின் கலாச்சாரம் சீர்கெட்டுள்ளது. தமிழ் சினிமாவால்தான் இது போன்றுநடக்கின்றது. கடந்த இரண்டு தினத்திற்கு முன்பு பேருந்து நிலையத்தில் பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர்மாணவிக்கு தாலிகட்டுகின்றார். .

ஒருபக்கம் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்பம் சினிமா நட்சத்திரம் திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர்தான் சூப்பர் ஹீரோயின் எனவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த செப்டம் 9ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தனர்.

ஆனால் , அதன் பின்னர் தான் நேர்மறையாகவும் , எதிர்மறையாகவும் நிறைய விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்சினிமாவால் தான் இளைஞர்கள் சீர்கெடுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. அதே நேரத்தில் அவரை சூப்பர் ஹீரோயின் எனவும் விமர்சித்துள்ளார்…

Next Post

கருணை இல்லத்தில் நடந்த கருணையே இல்லாத செயல்..!

Wed Oct 12 , 2022
வேலூர் அருகே கருணை இல்லத்தில் முதியோர்களை கருணையின்றி அடித்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரால் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில்கருணை இல்லம் செயல்பட்டு வருகின்றது.இதில் முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும் , முறையாக உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் , முதியவர்களுக்கு சரியாக […]
ஒரு வீட்டையே தூக்கிச் சென்ற கிராமத்தினர்..!! ஏன் தெரியுமா..? நெகிழ வைத்த காரணம்..!!

You May Like