fbpx

காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக முன்னாள் எம்பி..!! வலுக்கும் கண்டனம்..!!

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுகவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும், தேசநலத்தோடும், தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைவதன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும், மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி. நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியே தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர்.

காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக முன்னாள் எம்பி..!! வலுக்கும் கண்டனம்..!!

சுய விளம்பரத்திற்காக எந்த காரியத்தையும் செய்ததில்லை. அப்படி கேட்டவர்களை என் தாய் நாட்டிற்காக செய்ததை நான் ஏன் வெளிச்சம் போட்டு காட்டனும் என்று திருப்பி கேட்டவர். எதற்காகவும், யாருக்காகவும், வரம்பு மீறி பேசியதில்லை. நாகரிகமில்லா வார்த்தைகளைப் பேசுவது அவரின் பழக்கமும் இல்லை. இப்படி பல அருங்குணங்களை கொண்ட பெருந்தலைவரை திமுகவின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அவர்கள், காமராஜர் திமுகவின் கட்டைவிரலை வெட்டுவேன் என்று பேசினார் என்று கூறியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெருந்தலைவரை நேசிப்பவர்களும், அவர்களது பெயரை சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக்கொள்ள மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர். அவரைப்போல் தகுதியான தலைவர்கள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை, இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கதில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! உணவு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட IRCTC..!!

Wed Sep 28 , 2022
நவராத்திரிக்காக விரதம் இருக்கும் பயணிகளுக்கென ஸ்பெஷல் உணவு ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெளியூர் செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தை மக்கள் அதிகம் தேர்தெடுக்கின்றனர். ஏனெனில் மற்ற சேவைகளை விட ரயில் சேவை கட்டணம் குறைவு. அனைத்து வசதிகளும் அதில் உள்ளது. பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப ஏசி பெட்டி, நான்-ஏசி பெட்டி, படுக்கை வசதி என தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். […]

You May Like