fbpx

மன்மோகன் சிங் மறைவு..!! அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாஜக ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் ரத்து செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அண்ணாமலை, இன்று (டிசம்பர் 27) காலை 10 மணிக்கு எனக்கு நானே சாட்டையால் அடித்து கொடுக்கக்கூடிய நிகழ்வை எனது வீட்டின் முன்பு நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். வீட்டின் முன்பு 6 முறை என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன் என கூறியிருந்தார். அதேபோல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்றும் 48 நாட்களுக்கு விரதம் இருந்து முருகனை வழிபடப் போவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு..!! ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி குறைப்பு..?

English Summary

It has been announced that the BJP protests scheduled to take place in Tamil Nadu today will be canceled.

Chella

Next Post

உயிர் குடிக்கும் கக்குவான் இருமல்!. ஒரே ஆண்டில் 6 மடங்கு அதிகரித்த பாதிப்பு!. 32,000 வழக்குகள் பதிவு!. CDC அதிர்ச்சி அறிக்கை!

Fri Dec 27 , 2024
Whooping: கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்குகிறது. இதை ‘பெர்டுசிஸ்’ என்று அழைக்கின்றனர். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த கக்குவான் இருமலுக்கு பலியாகின்றனர். அதாவது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கையின்படி, அமெரிக்காவில் இந்த ஆண்டு டிசம்பர் 14 வரை 32,000க்கும் மேற்பட்ட கக்குவான் இருமல் […]

You May Like