fbpx

PMO: காணொலி மூலம் ரூ.41,000 கோடி மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்…!

இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் ரூ.41,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான சுமார் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக, அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 553 ரயில் நிலையங்களின் மறுவடிவமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்த நிலையங்கள், ரூ.19,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த நிலையங்கள் நகரின் இருபுறமும் ஒருங்கிணைக்கும் ‘நகர மையங்களாக’ செயல்படும். மேற்கூரை பிளாசா, அழகிய இயற்கையை ரசித்தல், இடைநிலை இணைப்பு, மேம்படுத்தப்பட்ட நவீன முகப்பு, குழந்தைகள் விளையாடும் பகுதி, விற்பனை நிலையங்கள், உணவு மையங்கள் போன்ற நவீன பயணிகள் வசதிகளை கொண்டிருக்கும்.

1500 சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாலை மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.21,520 கோடியாகும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், பாதுகாப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்தும், ரயில் பயணத்தின் திறனை மேம்படுத்தும்.

English Summary: Prime Minister Modi laid the foundation stone for around 2,000 railway projects worth Rs.41,000 crore

Vignesh

Next Post

Memorial: மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடம்!… முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!… சிறப்பம்சங்கள்!

Mon Feb 26 , 2024
Memorial: சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, 2022 ஜனவரியில் பொதுப்பணித்துறை துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் முடிந்துஉள்ளன. இதன் ஒரு பகுதியாக, கருணாநிதி நினைவிட முகப்பில், […]

You May Like