fbpx

’ஸ்டாலினுடன் பேசியதை நிரூபியுங்கள் … நான் அரசியலை விட்டே செல்கின்றேன்…. ஓ.பி.எஸ். சவால் !!!

ஸ்டாலினுடன் நான் பேசினேன் என நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே செல்கின்றேன் என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி , நான் முதல்வருடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார். நான் அவரை சந்திக்கவே இல்லை. ஒரு வேளை நான் சந்தித்து பேசியதை நீங்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஒரு வேளை நிரூபிக்கத் தவறிவிட்டால் அரசியலை விட்டு எடப்பாடி விலகுவாரா , அவர் அரசியலை விட்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினார்.

ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் என்னைப்பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் நான் பதில் அளிக்கின்றேன் எனக்கூறி உள்ள ஓ.பிஎஸ். பழனிச்சாமி தரப்பி நடத்தி பேராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் எடப்பாடி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கணவன் - மனைவி சண்டை..!! சமாதானம் செய்ய வந்தவரை சம்பவம் செய்த பின்னணி...!

Thu Oct 20 , 2022
ஆட்டிறைச்சி சமைப்பதில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு ஏர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிற்கு ஆட்டிறைச்சி வாங்கி வந்துள்ளார். ஆனால், அதை அவரது மனைவி சமைக்க மறுத்ததுடன் செவ்வாய்க்கிழமை நல்ல நாள், இன்று ஆட்டிறைச்சி சமைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என கணவருடன் வாக்குவாதத்தில் […]

You May Like