fbpx

’அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிரூபியுங்கள்’..! முதல்வருக்கு சவால் விடும் பிரேமலதா..!

தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக தேதிமுக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல நலத்திட்டங்களை அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் தான் தலைவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார். மேலும், திமுக ஒரு தில்லு முல்லு கட்சி என்பதை நிருபித்துள்ளதாகவும் அவர் பேசினார்.

’அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிரூபியுங்கள்’..! முதல்வருக்கு சவால் விடும் பிரேமலதா..!

தமிழகத்தில் உள்ள கட்சிகள் கூட்டணி அமைக்காமல், பணம் கொடுக்காமல் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் தேமுதிக தனித்துப் போட்டியிட தாயாராக உள்ளது. எங்களை போன்று மற்ற கட்சிகள் போட்டியிட தயாரா? என சவால் விட்டார். முக.ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால் தங்களது அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிரூபியுங்கள் பார்ப்போம்” எனவும் தெரிவித்தார்.

Chella

Next Post

’நேரம் வரும்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்’..! சசிகலா பரபரப்பு பேட்டி

Thu Sep 15 , 2022
“நேரம் வரும் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன்” என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. பொதுக்கூட்டம் நடந்த அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக […]
இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!! ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவோம்..!! சசிகலா அதிரடி

You May Like