fbpx

TN BUDGET | ’காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்’..!! ’2,676 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

➥ முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

➥ மேலும், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

➥ ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

➥ ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.

➥ ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

➥ 2,676 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.

➥ ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

➥ போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநகராட்சிகளில் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்.

➥ கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.

Read More : BUDGET BREAKING | ’சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Furthermore, the breakfast program will be expanded to benefit approximately 3 lakh students.

Chella

Next Post

TN Budget Breaking : பள்ளிப் பாடத் திட்டத்தில் சதுரங்கம் சேர்க்கப்படும்.. நிதியமைச்சர் அசத்தல் அறிவிப்பு..

Fri Mar 14 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்: உயர்கல்வித்துறைக்கு ரூ.8494 கோடி ஒதுக்கீடு. வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புக்கள் உருவாக்கப்படும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் உருவாக்கப்படும். குன்னூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அரசு கலை […]

You May Like