பொங்கல் பரிசுத்தொகை ரூ.3,000..!! இன்றே கடைசி நாள்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Pongal 2025

தமிழ்நாட்டின் பாரம்பரிய அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அரசு அறிவித்த ரூ.3,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமான அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.


கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, நேற்று வரை சுமார் 2 கோடியே 9 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. முன்னதாக வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட தேதிகளில் பல்வேறு காரணங்களால் பரிசுத் தொகுப்பைப் பெற தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை) ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட அட்டைதாரர்கள் தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்குச் சென்று இன்று தங்களது பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசு விநியோகத்தின் போது, முதியவர்களுக்கு கைரேகை சரியாகப் பதிவாகாததால் ஏற்பட்ட சிரமங்களைக் களைய அரசு ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கைரேகை சரிபார்ப்பில் சிக்கல் உள்ள முதியவர்களுக்கு, நவீன ‘கண் கருவிழி’ ஸ்கேனர் மூலம் அடையாளத்தைச் சரிபார்த்து உடனுக்குடன் பரிசுத் தொகுப்பை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்தத் துரித நடவடிக்கையால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலைச்சலின்றி தங்களது பொங்கல் பரிசைப் பெற்று மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Read More : இன்று போகிப் பண்டிகை..!! வீடுகளில் ‘காப்புக்கட்டு’ கட்டுவது ஏன்..? முன்னோர்களின் மூளையே வேற லெவல்..!!

CHELLA

Next Post

புதிய ரேஷன் கார்டு..!! வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்..!! எப்போது கிடைக்கும்..? வெளியான குட் நியூஸ்..!!

Wed Jan 14 , 2026
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு போன்ற அரசின் முக்கிய நலத்திட்டங்களைப் பெறுவதற்கு குடும்ப அட்டை (Ration Card) அடிப்படை ஆவணமாக இருப்பதால், புதிய அட்டை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மக்களின் இந்தத் தேவையைக் கருத்தில்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாகப் புதிய குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தகவல் […]
ration 2025

You May Like