பொங்கல் பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்…!

Confirm Train Ticket Rules

ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.


வரும் 2026-ல் ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜனவரி 12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட திட்டமிடுவார்கள்.

விரைவு ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், ஜனவரி 9-ம் தேதி பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம். ரயில் பயணத்துக்கு 60 நாட்கள் முன்பு முன்பதிவு செய்ய முடியும் என்பதால், மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நவம்பர் 13, 14-ம் தேதிகளில் அதிகம் பேர் முன் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17, 18-ல் திரும்புவோர் வரும் 18, 19-ம் தேதியன்று முன்பதிவு செய்யலாம்.

Vignesh

Next Post

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு... 10 பேர் பலி...! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Tue Nov 11 , 2025
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் […]
MK Stalin dmk 6

You May Like