பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வெளியாகும் தேதி …..

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் 3வது நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. இதை எதிர்பார்த்திரா வெற்றி என  பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த பாகத்தின் வெளியீடு எப்போது என்பது பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வசூலில் சாதனை படைத்த பாகுபலி , கே.ஜி.எப். படங்களைப் போலவே , பொன்னியின் செல்வன் திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.


அந்த வகையில் 2ம் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் பாகத்தில் அறிமுகக் காட்சிகள் , பாடல்கள் என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த பாகத்தில் பிரம்மாண்டமான அதிரடியான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே 2ம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுக்கின்றது. ஏற்கனவே 9 மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என இயக்குனர் மணி ரத்னம் அறிவித்திருந்தார். தற்போது வெளியான தகவல்படி ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்திற்கான எடிட்டிங் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Next Post

குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும் ஜியோ 4 ஜி லேப்டாப் .. எவ்வளவு விலை என்று தெரியுமா?

Mon Oct 3 , 2022
மிகக் குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜியோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் 4 ஜி ஜியோ ஸ்மார்ட் போன் வெளியிட்டது. இதுமிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனிடையே அடுத்த திட்டமாக ரூ.15000 மதிப்பில் பிரத்யேக ஜியோ ஓ.எஸ்.உடன் மடிக்கணினி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜி யோ நிறுவனம் உலக நிறுவனங்களான குவால்காம் மைக்ரோசாப்ட் போன்ற […]
jiolaptop down 1664784119

You May Like