பேஸ்புக்கில் பழக்கமான பிளஸ்1 மாணவி..!! லாட்ஜில் கதறவிட்ட வாலிபர்..!! 7 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?

பேஸ்புக் மூலம் பழக்கமான பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை, 7 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.


கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்டோ குரியன் (36). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கமான பெரும்பாவூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. பள்ளி மாணவியை கடத்தி லாட்ஜில் பலாத்காரம் செய்த பின்னர், சாலக்குடி ரயில் நிலையத்தில் விட்டு விட்டு தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜின்டோ குரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேஸ்புக்கில் பழக்கமான பிளஸ்1 மாணவி..!! லாட்ஜில் கதறவிட்ட வாலிபர்..!! 7 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?

6 மாதங்களுக்கு பிறகு ஜின்டோ குரியன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தலைமறைவானார். இதையடுத்து ஜின்டோ குரியனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவில் ஒரு நிறுவனத்தில் ஜின்டோ பணிபுரிந்து வருவதாக பெரும்பாவூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

CHELLA

Next Post

சினிமா நடிப்பதிலிருந்து நயன்தாரா பிரேக் !! திடீர் முடிவால் அதிர்ச்சி!!

Mon Nov 21 , 2022
நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தயானாதிலிருந்து படு பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு திரைப்படங்கள் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம்  செய்து கொண்டனர். இந்நிலையில் […]
nayan viki

You May Like