அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு கிடைக்கும்.
இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், தற்போது அஞ்சலகத்தில் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் ரூ.8 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.7 சதவீதத்தின் படி வட்டி மட்டும் உங்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 254 ரூபாய் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப முதலீடு காலத்தை நீங்கள் நீட்டிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அந்த வகையில், இந்த திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு நீங்கள் நீடித்தால் ரூ.8 லட்சமானது 21 லட்சம் ஆக அதிகரிக்கும். அதாவது உங்களின் முதலீடு அப்படியே இரட்டிப்பாகும்.