டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால், அச்சமடைந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
டெல்லிக்கு அருகில் இள்ள லக்னோ மற்றும் உத்தரகாண்டிலும் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 5.8 என பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.