அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் தாம்சன் (22). இவரது காதலி கேப்ரியல்லா (26). இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், கேப்ரியல்லா கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், குழந்தைப் பெற்றுக் கொள்ள கேப்ரியல்லாவுக்கு விருப்பமில்லை. ஆனால், தனது குழந்தை தனக்கு வேண்டும் என ஹரால்டு விரும்பி உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார காலத்திற்கு பின்னர் கருவை கலைக்க சட்டத்தில் அனுமதி இல்லை. அதனால், அந்த 6 வாரங்களும் தாம்சன், கேப்ரியல்லாவுடன் நெருக்கமாக இருந்து, கருவைக் கலைத்து விடாதவாறு பார்த்துக் கொண்டார்.
பின்னர், தாம்சனிடம் ஏதும் சொல்லாமல் 800 மைல் தொலைவில் உள்ள கொலராடோ மாகாணத்துக்கு சென்று கேப்ரியல்லா கருக்கலைப்பு செய்துள்ளார். இதன் பின்னர் காதலர் தாம்சனுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இந்த விவரம் தெரியாமல் காதலியுடன் அவர் பேசி கொண்டே சென்றுள்ளார். இந்நிலையில், கேப்ரியல்லா கருக்கலைப்பு செய்த விவரம் பற்றி தாம்சனிடம் கூறியதும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்து காதலியைக் கண்டித்துள்ளார். இதனால், அவர்களிடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. அவர், தனது விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டதற்காக கேப்ரியல்லா மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால், ஷாப்பிங் வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று கேப்ரியல்லாவின் கழுத்து பகுதியை, மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கி பிடித்து உள்ளார்.
எனினும், அவரை கேப்ரியல்லா தள்ளி விட்டுள்ளார். இந்த முறை, துப்பாக்கியை எடுத்து காதலியின் தலையில் ஹரால்டு சுட்டு உள்ளார். இதில், கேப்ரியல்லா சரிந்து கீழே விழுந்த பின்பும், ஆத்திரம் அடங்காமல் தொடர்ந்து அவரை சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கேப்ரியல்லா உயிரிழந்து விட்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் உறவில் அடிக்கடி, சண்டை வந்துள்ளது. காதலியை ஹரால்டு பலமுறை அடித்து, துன்புறுத்தி உள்ளார் என கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.