திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் மோசஸ் (25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை ரவி மற்றும் தாய் மலர் உள்ளிட்டவருடன் வசித்து வருகிறார் மோசஸ் சென்ற 5 மதத்திற்கு முன்னர் முதல் பகுதியைச் சேர்ந்த எஸ்தர் (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில், எஸ்தர் கணவர் மோசஸ் வீட்டில் வசித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர், 3 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் நான் திருமணம் நடந்து 5 மாதத்திற்குள் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது ஆகவே எஸ்தர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் படுக்கை அறையில் கதவை கூட்டிக்கொண்டு எஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு மாமியார் வீட்டைச் சேர்ந்தவர்கள் அரை கதவை தட்டி பார்த்தபோது திறக்கப்படவில்லை உடனடியாக அக்கம்பாக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது எஸ்த்தர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும் இது தொடர்பாக சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எஸ்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.